விசேட தேவையுடையவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு...


விசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக 3,000 ரூபா வழங்கப்பட்டது.
32000 பயனாளிகள் இதன்மூலம் பயன்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இதற்காக 40000 பேர் வரையில் பதிவு செய்துள்ளதாக, நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
விசேட தேவையுடையவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு... விசேட தேவையுடையவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு... Reviewed by Editor on June 13, 2019 Rating: 5