இலங்கை மத்திய வங்கியின் ஆளுமை மிக்க உயரதிகாரியான தமிழ் யுவதி விபத்தில் உயிரிழப்பு

மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த அமிதா சுந்தரராஜ் (34 ) இலங்கை மத்திய வங்கியில் முக்கிய பொறுப்பிலுள்ள இளம் அதிகாரியாவார்.

லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதித்தடைகளை உடைத்துக் கொண்டு எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியை மோதித்தள்ளியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உதவி இயக்குனராகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகத்திலும் முக்கிய பதவி வகித்து வந்தவராவார்.

இந்த விபத்தில் முன்சக்கர வண்டி சாரதியான கிருஷாந்தா சில்வா (52) என்பவரும் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுமை மிக்க உயரதிகாரியான தமிழ் யுவதி விபத்தில் உயிரிழப்பு இலங்கை மத்திய வங்கியின் ஆளுமை மிக்க உயரதிகாரியான தமிழ் யுவதி விபத்தில் உயிரிழப்பு Reviewed by Editor on September 05, 2020 Rating: 5