அக்கரைப்பற்று மாநகர மக்களுக்கான , விஷேட அறிவித்தல்..!!




கடந்த 19 நாட்களாக எமது மாநகரம் தொடர்ச்சியாக  தனிமைப்படுத்தல் நிலையில் இருப்பதாலும் , தொற்றின் தாக்கம் குறைந்திருந்தாலும் , 

தொடர்ந்தும் புதிய தொற்றாளர்கள் ,

சில பிரதேசங்களில்  கண்டறியப்படுவதால் ,

எமது பிரதேசத்தின் நன்மை கருதியும் , மக்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டும் ,


நேற்று அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாகவும்  ,

இன்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி  தலைமையில்  இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாகவும் ,

பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை ,

மாநகர மக்களுக்கு அறியத்தருகின்றோம் !


தீர்மானங்கள் :


அக்கரைப்பற்று 14 (காதிரியா வடக்கு)


நகர் பிரிவு - 3


அக்கரைப்பற்று - 5


இவற்றுடன் சுகாதார அமைச்சின் அறிவித்தலுக்கு மேலதிகமாக , தொற்றின் 

நிலைமையையும் , மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு ,


அக்கரைப்பற்று பிரதான சந்தை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் முழுமையாக  தனிமைப்படுத்தல் பிரதேசமாக தொடரும் !


ஏனைய பிரதேசங்களில் இருப்பவர்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி , 

அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு ,

தங்களுடைய பணிகளில் 

மாலை 6 மணி வரை மட்டும்  ஈடுபடலாம் !


அத்தியவசிய தேவைகளுக்காக விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள மரக்கறி கடைகள் , மற்றும் அத்தியசிய நுகர்வோர் சில்லறைக் கடைகள்  மட்டுபடுத்தப்பட்டளவில் மாலை 6 மணிவரை திறக்கலாம் !


பாமசிகள் தவிர்ந்த ,

ஏனைய அனைத்து விற்பனை நிலையங்களும் , மறு அறிவித்தல் வரும் வரை மூடியே இருக்கும் !


ஹோட்டல்கள் பொதுமக்களுக்கு முழுமையாக மூடப்பட்டு , உணவுகளை கொண்டு செல்ல மட்டும்  வழங்குவதற்கு  நிபந்தனை களுடன் அனுமதிக்கப்படும் !


கூட்டம் கூடுதல் , நிகழ்வுகளை நடாத்துதல் என்பன முற்றாக தடைசெய்யப்படும் !


பள்ளிவாசல்களை திறப்பது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் !


அக்கரைப்பற்று பொலிஸ் எல்லையை கடந்து முறையான அனுமதி இல்லாமல் பிரயாணம் செய்ய தொடர்ந்தும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது !


அத்துடன் விவசாயிகள் ஏற்கனவே உள்ள நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் ,

என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதை அறியத்தருகின்றோம் !


எனவே மாநகர மக்கள் தொடர்சியாக சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றி 

எமது மூத்த பிரஜைகள் , நோயாளிகள் , குழந்தைகள் மீது அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டுகிறோம் !


இத்தனை நாட்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு மத்தியில் ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்தும் உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்கின்றோம் !


சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் 


முதல்வர் 

மாநகர சபை

அக்கரைப்பற்று .

அக்கரைப்பற்று மாநகர மக்களுக்கான , விஷேட அறிவித்தல்..!! அக்கரைப்பற்று மாநகர மக்களுக்கான , விஷேட அறிவித்தல்..!! Reviewed by Editor on December 16, 2020 Rating: 5