அமரபுர மற்றும் ராமான்ய நிக்காய மஹா சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள்



கொரோனாவினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அமரபுர மற்றும் ராமான்ய நிக்காய மஹா சங்கம் ஜனாதிபதியிடம் நேற்று (26) விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளார்கள்.

சுமார் 21,000 பௌத்த தேரர்களை இந்த நிக்காயா மஹா சங்கம் உறுப்பினர்களாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி கடந்த வியாழக்கிழமை (24) இலங்கையின் மகா புர நிக்காயவின் அகில இலங்கையின் பதவி வகிக்கும் கொட்டுக் கொட தம்மவாசய மகா நாயக்கவை முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர்   மாக்கார்  கல்கிசையில் உள்ள விகாரயில் வைத்து சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.

அமரபுர மற்றும் ராமான்ய நிக்காய மஹா சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள் அமரபுர மற்றும் ராமான்ய நிக்காய மஹா சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள் Reviewed by Editor on December 27, 2020 Rating: 5