நமது மக்களை பாதுகாப்பதற்கு சகல வழிமுறைகளிலும் உதவியவர்களுக்கு நன்றி கூறுகிறேன் - எஸ்.எம்.சபீஸ்



(றிஸ்வான் சாலிஹு)

நீண்ட கூரிய கம்பியினால் சருகுகளை குத்தி எடுப்பதுபோன்று மக்களின் உயிர்களை காவுகொள்ளும் கொரோனா தொற்றிலிருந்து அக்கரைப்பற்றில் நமது மக்களை பாதுகாப்பதற்கு சாத்தியமான சகல வழிமுறைகளிலும் கடமையாற்றிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.


அக்கரைப்பற்றில் கடந்த வாரங்களில் இறுக்கமான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நமது கடமைகளை நிறைவேற்றியது போன்று, இன்னும் நிலைமை சீராகும் வரை அவ்வழி முறைகளை கையாள்வது தொடர்பில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை
மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் தலைமையில் விசேட கலந்துரையாடலும், ஆலோசனைகளும் கேட்டறியப்பட்டது.


இதில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த உலமாக்கள் பங்கு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது மக்களை பாதுகாப்பதற்கு சகல வழிமுறைகளிலும் உதவியவர்களுக்கு நன்றி கூறுகிறேன் - எஸ்.எம்.சபீஸ் நமது மக்களை பாதுகாப்பதற்கு சகல வழிமுறைகளிலும் உதவியவர்களுக்கு நன்றி கூறுகிறேன் - எஸ்.எம்.சபீஸ் Reviewed by Editor on December 27, 2020 Rating: 5