கடற்படைக்கு புதிய பிரதம அதிகாரி நியமனம்

 


இலங்கை கடற்படையின் பிரதம அதிகாரியாக  ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (15) முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடற்படையின் பிரதம அதிகாரி பதவிக்கான நியமனக் கடிதத்தை ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவுக்கு இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன வழங்கி வைத்தார். 

இந்த நிகழ்வு இலங்கை கடற்படைத் தலைமையகத்தில்  இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கடற்படைக்கு புதிய பிரதம அதிகாரி நியமனம் கடற்படைக்கு புதிய பிரதம அதிகாரி நியமனம் Reviewed by Editor on January 17, 2021 Rating: 5