(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை அலுவலகத்திற்குட்பட்ட சில பிரதேசங்களில் இன்று (05) செவ்வாய்க்கிழமை காலை 8.30மணி முதல் மாலை 5.00மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
அதனடிப்படையில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை பகுதிகளுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிவமைப்பு சபையினால் வழங்கப்படும் நீர் இந்த நேர காலத்தில் (8.30 - 5.00) மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்பதோடு, முடியுமான வரை பாவனையாளர்கள் நீரை சிக்கனமாக பாவிக்குமாறும், இந்த காலத்தில் ஏற்படும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிவமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எம்.ரீ.ஏ.பாவா தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
January 05, 2021
Rating:
