பல மாதங்களின் பின்னர் இன்று கூடிய இணக்க சபை!!!



(சர்ஜுன் லாபீர்)

கொவிட்-19 காரணமாக சுமார் 5 மாத காலமாக இடை நிறுத்தப்பட்ட கல்முனை இணக்க சபையினது (mediation board) வாரந்த கூட்டம் இன்று (31) ஞாயிற்றுக்கிழமை கல்முனை இணக்க சபையின் தவிசாளர் இ.சந்திரசேகரன் தலைமையில் கல்முனை இஸ்லாமாபாத் பாடசாலையில் நடைபெற்றது.

இன்று 101 பிணக்குகளுக்கான அழைப்பானை விடுக்கப்பட்டதுடன் பல பிணக்குகளுக்கு தீர்வும் வழங்கப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்றைய அமர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 


பல மாதங்களின் பின்னர் இன்று கூடிய இணக்க சபை!!! பல மாதங்களின் பின்னர் இன்று கூடிய இணக்க சபை!!! Reviewed by Editor on January 31, 2021 Rating: 5