
(றிஸ்வான் சாலிஹூ)
இலங்கை மக்கள் கட்சியின் ஸ்தாபகர் அமரர் விஜய குமாரதுங்க அவர்களின் 33ஆவது நினைவு தின நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பு புதிய நகரசபை மண்டத்தில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
நினைவு தின உரையை இலங்கை கொமியூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டி. குணசேகர அவர்கள் நிகழ்த்தினார். அணிசேரா வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய ஒற்றுமை. இந்த விடயங்களில் விஜய குமாரதுங்க அவர்கள் உறுதியாக நின்றார். விஜய குமாரதுங்க அவர்களுடன் மிக நெருங்கி பழகியவர் என்ற வகையில் நான் அவரிடம் கண்ட விசேட அம்சம் இதுவாகும். அக்காரணத்தினாலேயே பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முகாம்களுக்கு செல்லும் அளவிற்கு அவரிடம் பலம் காணப்பட்டது என தனதுரையில் குறிப்பிட்டார்.
நிகழ்வில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரன, சோசலிச மக்கள் முன்னணியின் செயலாளர் வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே, இலங்கை மக்கள் கட்சியின் செயலாளர் அசங்க நவரத்ன உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்று பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Reviewed by Editor
on
February 21, 2021
Rating: