(றிஸ்வான் சாலிஹூ)
தமண பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளராக இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான அக்கரைப்பற்றைச் சேர்ந்த யஹியா றாசித் அவர்கள் இன்று (25) வியாழக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொத்துவில் பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றி வந்த இவர், அம்பாறை மாவட்ட செயலாளரினால் வழங்கப்பட்ட உதவிப் பிரதேச செயலாளர்களுக்கான உள்ளக இடமாற்ற கட்டளைக்கிணங்க இவ்விடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படையில் இங்கு தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், பேராதனைப் பல்கலைக்கழக கலைத்துறைப் பட்டதாரியான திரு.ராசித் அவர்கள் இதற்கு முன்னர் சிங்கள மொழிப்பாட ஆசிரியராகவும், இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலக கணக்காளர் ஏ.பி.அப்துல் ரஹ்மான், தமன பிரதேச செயலக கணக்காளர் ஏ.கே. அஸ்ஹர், லாகுகல பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எம்.ஹாறூன், தமண பிரதேச செயலக சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.ஷுஐப், உதவிப் பிரதேச செயலாளரின் பாரியார் சட்டத்தரணி அய்ஷா பேகம், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட மருத்துவ ஆய்வுகூட தொழில் நுட்பவியலாளர் எம்.எம்.ரிம்சான், தமன பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.ரஸ்ஸாக், தமன பிரதேச செயலக நிருவாக கிராம அலுவலர் எல்.பி.ஜீ.எஸ். புஷ்பகுமார, பொத்துவில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். சுபைர், நிருவாக கிராம அலுவலர் ஐ.எல்.எம்.சுபைர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
