(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக அட்டாளைச்சேனை இளைஞர்களால் இன்று (29) சனிக்கிழமை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது என்று ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிகழ்வை முடியுமானவர்கள் ஏற்பாடு செய்து இரத்த தட்டுப்பாட்டை இல்லாமல் செய்யுமாறு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றார்கள்.
இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு!!!
Reviewed by Editor
on
May 29, 2021
Rating:
