இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையின் கீழ், அங்கு வசிக்கும் இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு, இஸ்ரேலின் டெல்அவிவ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இஸ்ரேலில் தோன்றியுள்ள அமைதியற்ற சூழ்நிலையில், மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்க்குமாறும் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென்றும் இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்
Reviewed by Sifnas Hamy
on
May 16, 2021
Rating:
