மாவனெல்ல, தெவனகல பிரதேசத்தில் இன்று (05) சனிக்கிழமை மண்சரிவில் சிக்கி காணாமல்போயிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற மண்சரிவினால் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தாய், தந்தை மற்றும் அவர்களின் 23 வயது மகள், 29 வயது மகன் என 4 பேர் மண்சரிவில் புதையுண்டு காணாமல் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணுக்குள் புதையுண்ட குடும்பத்தின் சோகக்கதை.
Reviewed by Editor
on
June 05, 2021
Rating:
