பஸ் நிலையத்துக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

(வி.சுகிர்தகுமார்)

அக்கரைப்பற்று பஸ் நிலையத்துக்கு அருகில் இன்று (26) திங்கட்கிழமை காலை 60 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சடலமாக மீட்கப்பட்டவர் பொத்துவில் ஜலால்தீன் சதுக்கம் பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய கலந்தர் லெப்பை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. குறித்த நபரின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 



 

பஸ் நிலையத்துக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு பஸ் நிலையத்துக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு Reviewed by Editor on July 26, 2021 Rating: 5