வாழைச்சேனையை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் நேற்று (05) வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டு உடல் உரைப் பையில் போட்டு கட்டப்பட்டு வாழைச்சேனை சந்தையில் உள்ள கடை ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட அந்த குடும்ப பெண் வாழைச்சேனை அல்லாப்பிச்சை வீதியைச் சேர்ந்த முஹம்மட் ஹனீபா சித்தி லைலா என்று அடையாளங் காணப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உரப்பையினுள் சடலம்!!!
Reviewed by Editor
on
August 06, 2021
Rating: