(றிஸ்வான் சாலிஹூ)
இறக்காமம் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட குடுவில், கொக்கிலாங்கல் பகுதியில் வாழும் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக மாடு வளர்ப்பில் ஈடுபட்டு, அதற்கு மேய்ச்சல் தரையாக ஆண்டாண்டு காலமாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்தி வந்த நிலங்கள் அண்மைக்காலமாக சிலரின் அதிகார வலுவுடனும், செல்வந்தர்களாலும் அடாத்தாக பிடித்து மண் நிரப்பி வேளாண்மை செய்து, மாட்டு பண்ணையர்களின் வயிற்றில் அடித்து அம்மக்களை பெரும் கஷ்டத்துக்குள்ளாக்கியுள்ளதாக இறக்காமம் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் கெளரவ ஏ.எல்.நெளபர் தெரிவித்துள்ளார்.
இறக்காமம், குடுவில் ஐக்கிய மக்கள் கால்நடைகள் பண்ணை வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.இஸ்மாயிலின் தலைமையில் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை காலை கொக்கிலாங்கல் பகுதியில் நடைபெற்ற எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த உப தவிசாளர் மெளலவி நெளபர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இக்கண்டன போராட்டத்தில் கருத்து தெரிவித்த கால்நடை வளர்ப்புசங்கத்தின்செயலாளர்,
கால்நடை வளர்ப்பு சங்கத்தின் உறுப்பினர் யூ.எல்.ஜெமீல் இங்கு கருத்து தெரிவிக்கையில்,
மற்றொரு கால்நடை வளர்ப்பு சங்கத்தின் உறுப்பினர் ஜனாப். மெளஜூன் கருத்து தெரிவிக்கையில்,
ஆகவே, அதிகாரமிக்கவர்களாலும், வசதி படைத்தவர்களாலும் அடாத்தாக பிடித்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேய்ச்சல் தரை பகுதிகளை உடனடியாக விடுவித்து தருவதோடு அப்பகுதிகளை அடையாளப்படுத்தி தருமாறு இறக்காமம் பிரதேச செயலாளர், இறக்காமம் பிரதேச தவிசாளர், அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் உட்பட்ட அரச உயர் மட்ட அதிகாரிகளை அப்பகுதி மக்கள் வினயமாக கேட்டுக் கொள்கின்றார்கள்.