மாற்று வழியை அறிவித்துள்ள பரீட்சை திணைக்களம்

2020 ஆம் ஆண்டிற்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று (23) வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.

பல்வேறு மாணவர்கள் தங்களது பரீட்சை இலக்கத்தை மறந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளதோடு,

அவ்வாறு பரீட்சை இலக்கத்தை மறந்த மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்திபரீட்சை பெறுபேறுகளை பார்க்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஏதேனும் மேலதிக விசாரணைகள் இருப்பின் 011 2 784 208, 011 2 784 537, 011 3 140 314 என்ற இலக்கங்களிற்கு அல்லது 1911 என்ற துரித இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என்று அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.



மாற்று வழியை அறிவித்துள்ள பரீட்சை திணைக்களம் மாற்று வழியை அறிவித்துள்ள பரீட்சை திணைக்களம் Reviewed by Editor on September 24, 2021 Rating: 5