சர்வதேச பத்திரிகையாளர்கள் அங்கத்துவம் வகிக்கும் சர்வதேச பத்திரிகை ஸ்தாபனம் (International Press Institute) தலைமைப் பொறுப்பேற்கும் முதல் பெண்மணி எனும் பெருமைமை தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கதீஜா படேல் பெற்றுள்ளார்.
புலனாய்வு பத்திரிகையாளரான கதீஜா படேல் அல் ஜசீரா உட்பட பல்வேறு சர்வதேச ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது தென்னாப்பிரிக்காவின் பிரபலமான Mail & Guardian பத்திரிகையில் தலைமை ஆசிரியராக பணியாற்றி கொண்டிருக்கின்றார்.
சர்வதேச பத்திரிகை ஸ்தாபனத்தின் முதல் பெண் தலைவர் மற்றும் முதல் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் என்ற பெருமையை இவர் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பத்திரிகையாளர்கள் அமைப்பின் பொறுப்பாளராக கதீஜா நியமனம்
Reviewed by Editor
on
September 19, 2021
Rating: