(றிஸ்வான் சாலிஹு)
நாளை (19) ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிமுதல் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு அக்-பாயிஷா மகா வித்தியாலயத்தில் கொவிட்-19ற்கான தடுப்பூசி ஏற்றும் 4ம்கட்ட நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று அக்கரைப்பற்று பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் எம்.ஏ.றாசீக் தெரிவித்துள்ளார்.
20 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்,பெண் இருபாலாருக்குமான கொரோனா தடுப்பூசி போடப்படுகின்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், குறிப்பிடப்படும் வயதுக்குரியவர்கள் சமூகம் தந்து தங்களுக்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ளும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்வதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தடுப்பூசி பெற வரும்போது கட்டாயம் இளைஞர்கள் தங்களுடைய அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு வருமாறும் தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
September 18, 2021
Rating:
