திருகோணமலை மாவட்ட கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காரொன்று விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரியொருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளதோடு காரின் சாரதியும் பொலிஸ் உத்தியோகத்தருமான மற்றொருவர் படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அதிதீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு (11) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
மாத்தளை பகுதியைச் சேர்ந்த டி.எல் சிறிசேன (55) எனும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவம் திருகோணமலையிலிருந்து கந்தளாயிக்குச் சென்ற கார் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பதோடு, சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே இவ்விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.