ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தீயில் கருதி உயிரிழப்பு

நுவரெலியா மாவட்ட இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு (07) வியாழக்கிழமை இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், 11 வயது மகள், ஒரு வயது குழந்தை மற்றும் அவர்களின் தாத்தா, பாட்டி ஆகியோரே இத்தீயில் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

இராகலை, முதலாம் பிரிவு தோட்டத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. பல கோணங்களில் பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.






ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தீயில் கருதி உயிரிழப்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தீயில் கருதி உயிரிழப்பு Reviewed by Editor on October 08, 2021 Rating: 5