கசிந்துள்ள பண்டோரா பேப்பர்ஸ் குறித்து இந்திய அரசு பல-அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பண்டோரா பேப்பர்களில் தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட 300 க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் நேர்மையானவராகக் கருதப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரும் பண்டோரா பேப்பர்களில் வெளிவந்துள்ளது. அவர் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் 2016-ல் துவங்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் என்று குறிப்பிடுகிறது இந்த பண்டோரா பேப்பர்ஸ்.
சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் அவரது மாமனார் ஆனந்த் மேத்தா ஆகியோர் இந்த நிறுவனத்தின் மூலம் பயன் பெறும் உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்கள் என்று கூறப்படுகிறது.