மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையில் பணியாற்றும் வருமானவரி உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (05) கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பிரதேச சபைக்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர், நபரொருபரிடம் குறித்த உத்தியோகத்தர் இலஞ்சத்தினை பெற்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்திற்கு கொண்டு சென்று முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 18ஆம்திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைவாக 18 ஆந் திகதி மேலதிக விசாரனைகளுக்காக கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அனுமதியளித்தார்.
பொதுமகனுக்கான ஆவணம் ஒன்றினை வழங்குவதற்காக 250,000 இலட்சம் கோரிய உத்தியோகத்தர் ஏற்கனவே 25,000 பணம் வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், நேற்றைய தினம் இரண்டாவது தடவையாக 25,000 பணத்தை இலஞ்சமாக பெற்றபோதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.