(சியாத் எம் இஸ்மாயில்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ''சகல சுகாதார சேவையாளரும் ஒன்றாக நிற்போம் கோரிக்கைளை வெல்வோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் சுகாதார சேவைப்பிரிவினருக்கு நிவாரணங்களை முறையாக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை ஒன்றினைந்த தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (08) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காலை 7.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்ற இப்போராட்டத்தில் வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் மற்றும் அகில இலங்கை சுவசேவை சங்கங்களின் பிரதிநிதிகள் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் சுகாதார நடைமுறையை பின்பற்றியும் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.