மாணவர்களுக்கான பக்கீர் பைத் பயிற்சிப் பட்டறை -2021

(றிஸ்வான் சாலிஹு)

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த  மாணவர்களுக்கான பக்கீர் பைத்  பயிற்சிப்பட்டறை -2021  நிகழ்வு பொத்துவில் அல்-அக்ஸா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றது.  

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் இணைப்பாளரும், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தருமான ஏ.எல்.தெளபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. சரவணமுத்து நவநீதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விஷேட அதிதிகளாக பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.பிர்னாஸ், பொத்துவில் பிரதேச செயலக கணக்காளர் அல்-ஹாஜ் எம்.ஏ. அப்துர் ரஹ்மான், பொத்துவில் அல்- அக்ஸா வித்தியாலயத்தின் அதிபர் என்.ரீ. அப்துல் கரீம் அவர்களும் கலந்து கொண்டனர் . 

அத்தோடு, ஆலையடிவேம்பு கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் எம்.எஸ்.ஜவ்பர், பொத்துவில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்.ஜனாப். எம்.எல்.எம்.இஸ்ஸத், கலைஞர். கிராமத்தான் கலீபா உட்பட பல இலக்கிய ஆர்வலர்கள் ஆகியோர்களது பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வின் வளவாளராகளாக கிழக்குமாகண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர் ஜனாப் எஸ்.ஏ.எம்.நளீம், பொத்துவில் பாவா யூ.எல். இப்றாகீம் அவர்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.









மாணவர்களுக்கான பக்கீர் பைத் பயிற்சிப் பட்டறை -2021 மாணவர்களுக்கான பக்கீர் பைத்  பயிற்சிப் பட்டறை -2021 Reviewed by Admin Ceylon East on November 01, 2021 Rating: 5