மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு இன்று (15) போராட்டம் நடாத்தியுள்ளதால்,பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வனஇலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு கோரியதாகவும் அதனை வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த போராட்டம் அவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்களின் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குறித்த பிக்குவின் செயற்பாடு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலகத்தில் சுமனரத்ன தேரர் போராட்டம்
Reviewed by Editor
on
November 15, 2021
Rating: