பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் 2021ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் ரூபா 200,000 (இரண்டு இலட்சம்) பெறுமதியான தெரு விளக்குகள் கடந்த புதன்கிழமை (24) வழங்கி வைக்கப்பட்டன.
பொத்துவில் பிரதேச செயலாளர் திரு. சந்துருவன் அநுருத்த, உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ், கணக்காளர் ஏ.பீ.அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில், பொத்துவில் களப்புக்கட்டு வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் என்.எச். முனாஸ் அவர்களிடம் இவை வழங்கி வைக்கப்பட்டன.
விரைவில் இவ்விளக்குகள் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் தேவை உணரப்படும் அவசியமான இடங்களில் பொறுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியில் தெரு விளக்குகள் வழங்கல்
Reviewed by Editor
on
November 26, 2021
Rating: