அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (16) செவ்வாய்க்கிழமை கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்ஆர்ப்பாட்டப் பேரணியில்,தற்போது நாட்டில் பொருட்களின் விலை உயர்வு, உரத் தட்டுப்பாடு, அரச சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படும் என அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.