தற்போது ஆபிரிக்க நாடுகளின் ஏற்பட்டுள்ள புதிய வகையான "ஒமிக்றோன்" வைரஸ் தொற்றுக் காரணமாகவே அந்ந நாடுகளின் விமானங்கள் இலங்கைக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், இன்று (27) நள்ளிரவு முதல் எதிர்வரும்14 நாட்களுக்கு தென்னாபிரிக்கா, சிம்பாப்வே, சுவிஸ்சிலாந்து,அங்கோலா,மொசாம்பிக் லெசொத்தோ, பொட்ஸ்வானா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளின் விமானங்களை தரை இறங்குவதற்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் எவராயினும் இருப்பின், கட்டாய தனிமைப்படுத்தலில் அவர்கள் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஒமிக்றோன்" எதிரொலியால் அந்நாட்டு விமானங்கள் இலங்கைக்கு வர உடனடி தடை
Reviewed by Editor
on
November 27, 2021
Rating: