திருமணமாகாத இளைஞர் யுவதிகளுக்கு உளவளத்துணை இலவசப் பாடநெறி

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் உளவளத்துணைப் பிரிவினால், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர் யுவதிகளுக்கு 'திருமணத்திற்கு முந்திய உளவளத்துணையும் வாழ்க்கைத் திறனும்' எனும் 04 மாத இலவசப் பாடநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று  பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரி.எம். முஹம்மத் அன்ஷார் அவர்களின் தலைமையில், உளவளத்துணை உத்தியோகத்தார் எல்.ரி.எம் இயாஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் வியாழக்கிழமை (25) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.கே.ரொசின்தாஜ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம் தமீம், நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்  பாறூக், விஷேட அதிதிகளாக மெளலவி ஏ.எல்.எம்.அஸ்ரப் (ஷர்க்கி), எம்.பீ.ஏ.ஹமீட், டாக்டர். சுமதி ரெமான்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.






திருமணமாகாத இளைஞர் யுவதிகளுக்கு உளவளத்துணை இலவசப் பாடநெறி திருமணமாகாத இளைஞர் யுவதிகளுக்கு உளவளத்துணை இலவசப் பாடநெறி Reviewed by Editor on November 26, 2021 Rating: 5