(றிஸ்வான் சாலிஹு)
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அலுவலகங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி சமுர்த்தி வலயப்பரிவில் அமைந்துள்ள 166 கிராம சேவகர் பிரிவில் 'கதாமி' சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அலுவலகமும், 167டீ புதிய காத்தான்குடி கிராம உத்தியோத்தர் பிரிவில் 'டீன்' சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் கருத்து தெரிவிக்கையில்,
சமுர்த்தி வேலைத் திட்டத்தினை மேலும் பலப்படுத்தவும், சமுர்த்தி பயனாளிகள் இதன் மூலம் தமக்கான சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளவுமே கிராம மட்டத்தில் செயற்பட்டு வரும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பிற்கான அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.மஜிட், சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர்களான ஏ.எல். இசட் பஹ்மி, எஸ்.எச்.முஸம்மில், வலய உதவியாளர் எம்.எச்.எம்.அன்வர், மற்றும் இப்பிரிவுகளுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.பஜ்ரியா, திருமதி.ரமீஸா, மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் நிருவாகிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.