அந்நத்வதுல் கைரிய்யாஹ் ஏற்பாட்டில் கலாநிதி பட்டம் பெற்ற கண்ணிய உலமாக்களை கெளரவிக்கும் விழா

(றிஸ்வான் சாலிஹு)

அந்நத்வதுல் கைரிய்யாஹ் - அக்கரைப்பற்று அமைப்பின் ஏற்பாட்டில் இஸ்லாமிய துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற ஐந்து கண்ணிய உலமாக்களை கெளரவிக்கும் மாபெரும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) மாலை 3.30மணியளவில், அக்கரைப்பற்று காதிரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் முன்றலில், அந்நத்வதுல் கைரிய்யாஹ்வின் தலைவர் அஷ்ஷேக் ஏ.எல்.முஹம்மத் ஐயூப் (யூசுபி) அவர்களின் தலைமையில் நடைபெறும்.

கலாநிதிகளான மெளலவி பீ.எம்.ஹம்தூன் (ஷர்கி), அல்ஹாபீழ் மெளலவி எம்.ஐ.எம்.சித்தீக் (இன்ஆமி), அல்ஹாபீழ் மெளலவி எம்.ஏ.அஸ்ஹர் (பலாஹி), மெளலவி யூ.எல்.முஹம்மட் அஸ்லம் (ஷர்கி), மெளலவி ஏ.எம்.அப்துர் றாசீக் (மன்பஈ) ஆகியோர் பொன்னாடை போர்த்தி ஞாபக சின்னம் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளதோடு, இவர்களுடன் அக்கரைப்பற்று ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் மெளலவி எம்.எம்.ஏ.அப்துல் லத்தீப் (பஹ்ஜி) மற்றும் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் எஸ்.ரீ.அப்துல் அஸீஸ் (ஜே.பி) அவர்களும் இந்நிகழ்வில் கெளரவிக்கப்படவுள்ளார்கள்.

பிரதம அதிதியாக கட்டார் ஹமத் பின் கலீஃபா பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பேராசிரியர் கலாநிதி எம்.எம்.தீன் முஹம்மத் அவர்களும், விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.அஹமட் ஸகீ, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம்.அன்சார்  அக்கரைப்பற்று ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் அஷ்ஷேக் எம்.ஐ.எம்.ஹபீப் (றஹ்மானி) ஆகியோர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வுக்கு பொதுமக்கள் அனைவரையும் ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நத்வதுல் கைரிய்யாஹ் ஏற்பாட்டில் கலாநிதி பட்டம் பெற்ற கண்ணிய உலமாக்களை கெளரவிக்கும் விழா அந்நத்வதுல் கைரிய்யாஹ் ஏற்பாட்டில் கலாநிதி பட்டம் பெற்ற கண்ணிய உலமாக்களை கெளரவிக்கும் விழா Reviewed by Editor on December 16, 2021 Rating: 5