மின்சாரம் மற்றும் நீர் கட்டணமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது- வாசுதேவ நாணயக்கார

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நீர் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக உரிய பிரிவினருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு நீர் விநியோக அமைப்பிற்கு ஒரு பிரச்சினையல்ல என்றும் எனினும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் அது பிரச்சினையாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குடிநீர் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினக்குரல்



மின்சாரம் மற்றும் நீர் கட்டணமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது- வாசுதேவ நாணயக்கார மின்சாரம் மற்றும் நீர் கட்டணமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது- வாசுதேவ நாணயக்கார Reviewed by Editor on December 23, 2021 Rating: 5