அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு சென்ற பஸ் மீது கல்வீச்சு

அக்கரைப்பற்றிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி மீது அம்பாறை வளத்தாப்பிட்டி பிரதேசத்திற்கும் மல்வத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் இன்று (30) வியாழக்கிழமை காலை 7.45மணியளவில் கல்வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் பஸ் வண்டியின் முன்பக்க  கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி - ஏசியன் நியூஸ்



அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு சென்ற பஸ் மீது கல்வீச்சு அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு சென்ற பஸ் மீது கல்வீச்சு Reviewed by Editor on December 30, 2021 Rating: 5