தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் அம்பாரை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் கானப்படுகின்ற சிறந்த தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று (15) புதன்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் தலைவர் எம்.சி.எம் சுனில் ஜயரத்ன தலைமையில் நடைபெற்றது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த இளம் தொழில் முயற்சியாளரும், மதீனா யோகட் உற்பத்தி நிறுவனத்தின் பணிப்பாளருமான என்.எம்.அனஸ் கிழக்கு மாகாணத்தின் சிறந்த இளம் தொழில் முயற்சியாளர் என்ற விருதை பெற்று இந்த பிரமாண்டமான நிகழ்வில் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
அனஸ் அவர்கள் தன்னுடைய சொந்த முயற்சியால், பெரும் சாவல்களுக்கும், பெரும் கஸ்டங்களுக்கும், நேர்மையான உழைப்புக்கும் மத்தியில் முன்னேறி பெற்ற இந்த விருதானது, எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விருதினை அவர் பெற வேண்டும் என்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.