கண்டால் வர சொல்லுங்க, அவர கையோட விவாதத்திற்கு கூட்டி வாருங்கள். பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டினை கண்டால் கூட்டி வாருங்கள், நான் விவாதத்துக்கு தயார். இவ் விவாதம் நேரலையில் ஒளிபரப்பப்படவேண்டும். நான் பாராளுமன்றத்தில் கூறிய கருத்தில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை அது எமது மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி தெரிவித்த கருத்து தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்கள் சாணக்கியன் எம்.பியை நான் விவாதத்திற்கு அழைக்கின்றேன் என்று தெரிவித்த கருத்திற்கே இவர் தற்போது இவ்வாறு பதிலளித்துள்ளார்.