ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபரொருவர் உயிரிழப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று (04) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனையைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ள சந்தேக நபர் நோய் நிலைமையின் காரணமாக கடந்த நவம்பா் மாதம் 23ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதன் பின்னா், மேலதிக சிகிச்சைக்காக டிசம்பா் மாதம் 5 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தங்கி சிகிச்சைப் பெற்று வந்துள்ள நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபரொருவர் உயிரிழப்பு ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபரொருவர் உயிரிழப்பு Reviewed by Editor on January 05, 2022 Rating: 5