மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்

இவ்வருடத்திற்கான முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் வவுனியா  மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ. சரத்சந்திர அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர்களான, வட மாகாண ஆளுநர், கெளரவ ஜீவன் தியாகராஜா மற்றும் கௌரவ. குலசிங்கம் திலீபன், ஆகியோரின் இணைத் தலைமையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான், கௌரவ. விணோ நாகரதலிங்கம் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் பங்கேற்புடன் இன்று (31) திங்கட்கிழமை வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது. 

இம்மாவட்ட  அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் வட மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பிரதேச செயலகங்களின் பிரதேசச் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,பொலிஸ் உயரதிகாரிகள்,  அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள்  , உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் Reviewed by Editor on January 31, 2022 Rating: 5