மணலை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை

2024ஆம் ஆண்டு முதல் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

துறைமுக நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நாட்டிலுள்ள ஆறுகளிலிருந்து மணலை வழங்க முடியாது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2021-25 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மணல் தேவை 57 மில்லியன் கன மீற்றராக மதிப்பிடப்பட் டுள்ளது, ஆனால் நாட்டில் 42 மில்லியன் கனமீற்றரே உள்ளது.

ஆறுகளில் மணல் எடுப்பது நிறுத்தப்பட்டு வருவதாக வும், கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவையில் இருந்து மணல் எடுப்பதும் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித் தார்.

கடலில் ஆழமாகத் தோண்டுவதற்கு திட்டமிடப் பட்டாலும், மீனவ மக்களின் எதிர்ப்புக் காரணமாக மணல் இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


 

மணலை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை மணலை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை Reviewed by Editor on January 14, 2022 Rating: 5