சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் இரத்த தான முகாம்

(சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்)

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கியில் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூறா , சம்மாந்துறை நம்பிக்கையாளர்சபை, சம்மாந்துறை உலமா சபை, சம்மாந்துறை வர்த்தக சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் சம்மாந்துறை பத்ர் பள்ளிவாசலில் நேற்று (5) நடைபெற்றது.
இவ்இரத்ததான முகாமில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம் ஹனிபா, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா, வைத்தியசாலை திட்டமிடல் வைத்தியர் நியாஸ் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூறா, நம்பிக்கையாளர் சபை, உலமா சபை சம்மாந்துறை வர்த்தகசம்மேளன நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் அனுசரைனையுடனும் இளைஞர்கள், பெண்கள் என அதிகளவானோரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்ற இரத்ததான முகாமில் சுமார் 50 பேர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் இரத்த தான முகாம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் இரத்த தான முகாம் Reviewed by Editor on February 06, 2022 Rating: 5