சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனையில் மரதன் ஓட்ட போட்டி

(எஸ்.எம்.அரூஸ்)

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் மரதன் ஓட்டப் போட்டி நிகழ்ச்சி நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது எதிர்வரும் 2022.02.04ம் திகதி  முற்பகல் 06.15 மணிக்கு ஒலுவில் வெளிச்ச வீட்டுச் சந்தியில் ஆரம்பித்து அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் நிறைவடையும்.

இப்போட்டி நிகழ்ச்சியில் அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள் நிரந்தரமாக வசிக்கும் ஆர்வமுடைய ஓட்ட வீரர்கள் கலந்து கொள்ள முடியும் என்பதுடன் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படும்.

எனவே கழக வீரர்கள் மற்றும் ஆர்வமுடைய கழகம் சாரா வீரர்களை இப்போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை, சுதந்திர தினத்தில் இவ்வாறான மரதன் ஓட்டப் போட்டியை ஏற்பாடு செய்து, வீரர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுத்த பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா மற்றும் செயலாளர் ஐ.எல்.எம்.பாயிஸ் ஆகியோருக்கு அனைத்து விளையாட்டுக் கழகங்கள், பொதுமக்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனையில் மரதன் ஓட்ட போட்டி சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனையில் மரதன் ஓட்ட போட்டி Reviewed by Editor on February 03, 2022 Rating: 5