(முஹம்மட் அஸ்ரி, றிஸ்வான் சாலிஹு)
நீர் வழங்கல் அமைச்சர் கெளரவ வாசுதேவ நாணயக்கார மற்றும் இராஜாங்க அமைச்சர் கெளரவ சனத் நிசாந்த ஆகியோரின் சிறு நீர் நோயாளிகளுக்கான நிவாரண வேலைத்திட்டத்தில், தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் ஊடாக அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள சிறுநீரக நோயாளிக்கு நீர் வடிகட்டி (Water Filter) இன்று (22) செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், இராஜாங்க அமைச்சர் கெளரவ விமல வீர திஸாநாயக்க அவர்களின் இணைப்பாளருமான எஸ்.எல்.ஏ.அஸீஸ் (JP) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வனஜீவராசிகள் மற்றும் யானை வேலி அமைத்தல் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் திரு. அஞ்சன திசாநாயக்க அவர்களினால் சிறுநீரக நோயாளர்களுக்கு இந்த நீர் வடிகட்டி கையளிக்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் திருமதி நஹீஜா முஸப்பிர் அவர்களும் இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.