பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

(சமுர்தீன் நௌபர்)

2022 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச  செயலாளர் செல்வி. ரஞ்சனா அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் மாந்தை கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17) வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

இவ்ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கல்வி, கமநல அபிவிருத்தி திணைக்களம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன திணைக்களம், வீதி அபிவிருத்தி, பிரதேச சபைகள், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, போக்குவரத்து, நீர் விநியோகம், வனஜீவராசிகள் திணைக்களம், காணி சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் Reviewed by Editor on February 17, 2022 Rating: 5