நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் எரிபொருள் விலைகள்

லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை இன்று (06) ஞாயிற்றுக்கிழமை  நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோரின் விலை 7 ரூபாவாலும் ஒடோ டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 184 ஆகவும், ஒரு லீட்டர் ஒடோ டீசல் 124 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.



நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் எரிபொருள் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் எரிபொருள்  விலைகள் Reviewed by Editor on February 06, 2022 Rating: 5