நுவரெலியா மாவட்ட மக்களுக்காக அக்கரைப்பற்றில் கையெழுத்து பெறப்பட்டது (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

(றிஸ்வான் சாலிஹு)

நுவரெலியா மாவட்டத்திற்காக வர்த்தமானி செய்யப்பட்ட 05 புதிய பிரதேச செயலகங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையோடு மலையக அரசியல் அரங்கம் "கிழக்கு முதல் மேற்கு" வரையில் மேற்கொள்ளும் கையெழுத்து சேர்க்கும் களப்பணிக்கு  வலு சேர்க்கும் முகமாக செவ்வாய்க்கிழமை (01) மாலை அக்கரைப்பற்றிலும் கையெழுத்து சேர்க்கும் களப்பணி இடம்பெற்றது.

அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், அரசியல் விவர்சகருமான சிறாஜ் மஸ்ஹூர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மலையக அரசியல் அரங்கின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜா (திலகர்) அவர்களும், பிரதான அமைப்பாளர் பீ.கே.ரவி அவர்களும், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் விமர்சகர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், இலக்கியவாதிகள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த நடவடிக்கைக்கு பூரண ஆதரவை வழங்குமுகமாக கையெழுத்தையிட்டு ஆதரவினை வழங்கினார்கள்.

அக்கரைப்பற்றில் கையெழுத்து சேர்க்கும் நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜா அவர்கள்...

(வீடியோ இணைப்பு)


மலையக அரசியல் அரங்கின் பிரதான அமைப்பாளர் பீ.கே.ரவி அவர்களிடம், அக்கரைப்பற்றில் எடுக்கப்பட்ட கையெழுத்து பத்திரத்தை நிகழ்வின் ஏற்பாட்டாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான சிறாஜ் மஸ்ஹூர் அவர்கள் கையளித்தார்.










நுவரெலியா மாவட்ட மக்களுக்காக அக்கரைப்பற்றில் கையெழுத்து பெறப்பட்டது (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) நுவரெலியா மாவட்ட மக்களுக்காக அக்கரைப்பற்றில் கையெழுத்து பெறப்பட்டது (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) Reviewed by Editor on March 02, 2022 Rating: 5