மஜ்மா நகர் நேற்றுடன் முடிவு

மஜ்மா நகரில் கொவிட் ஜனாஸாக்களை  அடக்கம் செய்வது நேற்றுடன் (05) சனிக்கிழமை முடிவுறுத்தப்பட்டுள்ளது.

05.03.2021 தொடக்கம் 05.03.2022 வரை கொவிட்-19 தொற்றினால் மரணித்த 3,634 நபர்களின் உடல்கள் இம்மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அரசாங்கத்தின் தீர்மானத்துக்கமைவாக நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை தத்தமது பிரதேசங்களில் 5ஆம் திகதியிலிருந்து நல்லடக்கம் செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டதற்கமைவாக ஓட்டமாவடி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கப் பணி முடிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி - பூமுடின் மலீக்



மஜ்மா நகர் நேற்றுடன் முடிவு மஜ்மா நகர் நேற்றுடன் முடிவு Reviewed by Editor on March 06, 2022 Rating: 5