நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால், இன்று (04) திங்கட்கிழமை முதல் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 15 சதவீத தனியார் பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் இந்த போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வழமைக்கு திரும்பிய போக்குவரத்து சேவைகள்
Reviewed by Editor
on
April 04, 2022
Rating: