தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவு

இன்று (30) சனிக்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு இலங்கை  தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப போக்குவரத்து கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் நேற்று (29) அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இச்சங்கம் தெரிவித்தது.




தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவு தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவு Reviewed by Editor on April 30, 2022 Rating: 5