(றிஸ்வான் சாலிஹு)
"வேலை உலகுக்கு ஆயத்தமாவோம்" என்ற தலைப்பின் கீழ் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தினால் மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட கட்டுரை போட்டியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (12) அக்கரைப்பற்று பத்ர் பாடசாலையில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் எச்.எல்.ஹாரூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஐ எம்.உவைஸ்ஆசிரிய ஆலோசகர் (C.G.O) ஏ.எம்.எம்.ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
பத்ர் பாடசாலையில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு
Reviewed by Editor
on
October 14, 2022
Rating:
