கடமையை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாண புதிய ஆளுனர்!!!



கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட சான் விஜயலால் டி சில்வா இன்று (10)  திங்கட்கிழமை காலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சந்திரதாச கலப்பதி, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபயகுணவர்த்தன, முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


கடமையை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாண புதிய ஆளுனர்!!! கடமையை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாண புதிய ஆளுனர்!!! Reviewed by Editor on June 10, 2019 Rating: 5